
சென்னை: தமிழகத்தில் புறவழிச் சாலைகளை தனியாரிடம் ஒப்படைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் 2021 செப்டம்பர் மாதம் சுங்கக்கட்டண உயர்வு தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்மீது பேசியநெடுஞ்சாலைத் துறை அமைச்சர், ‘2008-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைக்கட்டண விதிகளின்படி குறைந்தபட்சம் 60 கி.மீ.-க்கு ஒரு சுங்கச்சாவடி என்பதன் அடிப்படையில், தமிழகத்தில் 16 சுங்கச் சாவடிகள்தான் இருக்க வேண்டும். இந்த விதியை மீறி பெரும்பாலான சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன.