
சிவகங்கை: மாற்றுத் திறனாளி உள்ளிட்டோருக்கான உதவித்தொகைக்கு ஒப்புதல் கொடுப்பது கடந்த 8 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருவாய்த் துறையின் சமூக பாதுகாப்புத் திட்டம் மூலம் மாற்றுத் திறனாளிகள், முதியோர், கணவரால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னிகள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தகுதி உள்ளோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 2023 செப்டம்பரில் இருந்து மாதந்தோறும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,500-ம், மற்றவர்களுக்கு ரூ.1,200-ம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக விண்ணப்பித்தவர்களுக்கு, முதலில் உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணை மட்டும்வழங்கப்படுகிறது.