
விருதுநகர்: சுதந்திரத்திற்காக போராடியவர்களை கவுரவிக்க வேண்டிய நாள். ஆனால், அந்நாளில் பிரதமர் ஆர்எஸ்எஸ் குறித்து பேசியது சுதந்திரத்திற்காக போராடியவர்களை அசிங்கப்படுத்தும் செயல். என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து விருதுநகரில் இன்று அவர் அளித்த பேட்டியில், “தேச கட்டுமானத்திற்காக ஆர்எஸ்எஸ்காரர்கள் பாடுபட்டார்கள் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். சுதந்திரத்திற்காகப் போராடிய மகாத்மா காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் படேல், காமராஜர், கொடிகாத்த குமரன் ஆகியோரை இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது. சுதந்திரத்திற்கான எந்த போராட்டத்திலும் ஆர்எஸ்எஸ் பங்கேற்றது இல்லை. இன்று சுதந்திரத்திற்காக போராடியவர்களை கவுரவிக்க வேண்டிய நாள். ஆனால், ஆர்எஸ்எஸ் குறித்து பேசியது சுதந்திரத்திற்காக போராடியவர்களை அசிங்கப்படுத்தும் செயல்.