• August 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சுதந்​திர தினத்தயொட்டி, தமிழக காவல் துறையைச் சேர்ந்த 24 அதி​காரி​களுக்கு குடியரசுத் தலை​வர் பதக்​கம் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக டிஜிபி அலு​வல​கம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய அளவில் தனிச் சிறப்​புடன் பணி​யாற்​றும் காவல் அதி​காரி​களுக்கு ஆண்​டுக்கு இரு​முறை குடியரசுத் தலை​வர் பதக்​கம் வழங்​கப்​படு​கிறது. அந்த வகை​யில் இந்த ஆண்​டு, சுதந்​திர தினத்தை முன்​னிட்டு குடியரசுத் தலை​வரின் தகை​சால் பணிக்​கான பதக்​கம் தமிழக காவல் துறையைச் சேர்ந்த 3 காவல் அதி​காரி​களுக்கு வழங்​கப்​படு​கிறது.

அதன்​படி, பொருளா​தா​ரக் குற்​றப்​பிரிவு கூடு​தல் டிஜிபி பால​நாக தே​வி, சென்னை பெருநகர போக்​கு​வரத்​துக் காவல் கூடு​தல் ஆணை​யர் கார்த்​தி​கேயன், சிலை கடத்​தல் தடுப்​புப் பிரிவு ஐஜி சு.லட்​சுமி ஆகியோ​ருக்கு இந்த பதக்​கம் வழங்​கப்​படு​கிறது. மேலும், குடியரசுத் தலை​வரின் மெச்​சத்​தக்க பணிக்​கான பதக்​கங்​கள் 21 பேருக்கு வழங்​கப்​படு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *