• August 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் தினசரி 640-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில், ஞாயிறு, பண்டிகை நாட்களையொட்டி வரும் தேசிய விடுமுறை நாட்களில், வழக்கமாக 30 சதவீதம் வரைரயில் சேவைகள் குறைத்து இயக்கப்படும்.

அதன்படி, சுதந்திர தினத்தை ஒட்டி, இன்று (15-ம் தேதி ) தேசிய விடுமுறை என்பதால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை உள்ளிட்ட மின்சார ரயில் வழி தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *