
வேங்கை வயல் விவகாரம் தொடங்கி நெல்லையில் நடந்த இளைஞர் கவின் ஆணவக் கொலை, தற்போதைய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வரை திமுக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மென்மையான போக்குடனே திருமாவளவன் கண்டிக்கிறார் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. திருமாவளவன் செல்லும் திசை சரியா?
கடந்த காலங்களில் திமுக, அதிமுக என அரசியல் சூழலுக்கு ஏற்ப கூட்டணிகளை அமைத்தவர் திருமாவளவன். 2016 மூன்றாவது அணியாக மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி படுதோல்வி அடைந்தபின்னர், விசிக 2019 மக்களவைத் தேர்தல் முதலே தொடர்ந்து திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. 2024 தேர்தல் மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அங்கீரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகவும் விசிக மாறியிருக்கிறது.