• August 15, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் போது துணிச்​சலுடன் போரிட்ட, எல்லை பாது​காப்பு படை​யின் 16 அதி​காரி​கள் மற்​றும் வீரர்​களுக்கு வீர தீர விருதுகள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. சுதந்​திர தின கொண்​டாட்​டத்தை முன்​னிட்டு துணிச்​சலுடன் செயல் ஆற்​றிய வீரர்​களுக்கு வீர தீர விருதுகள் வழங்​கப்​படு​வது வழக்​கம். காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி தீவிர​வாதிகள் நடத்திய தாக்​குதலில் சுற்​றுலா பயணி​கள் 26 பேர் கொல்​லப்​பட்​டனர்.

இதற்கு பதிலடி​யாக ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கையை இந்​தியா மேற்​கொண்​டது. கடந்த மே 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பாகிஸ்​தானின் பல பகு​தி​களில் இந்​தியா தாக்​குதல் நடத்​தி​யது. பாகிஸ்​தான் ராணுவத்​தினர் எல்​லைப் பகு​தி​யில் துப்​பாக்கிச் சூடு மற்​றும் ட்ரோன் தாக்​குதலில் ஈடு​பட்​டனர். இவற்றை எல்லை பாது​காப்ப படை​யினர் மற்​றும் இந்​திய ராணுவத்​தினர் முறியடித்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *