
சென்னை: சென்னை மாநகரில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 20 ஆயிரம் பேரை நாய்கள் கடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவலால் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், நாய்க்கடி சம்பவங்களை தடுக்க திட்டம் வகுத்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளனர்.
சென்னையில் வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் ராட்வீலர் நாய்களும், தெருநாய்களும் சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களை கடித்துக் குதறிய சம்பவங்களையடுத்து, நாய்களை கட்டுப்படுத்தக் கோரி கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான ஆர்.எஸ். தமிழ்வேந்தன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.