
புதுடெல்லி: பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, கடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் உயிரிழந்த மற்றும் நிரந்தரமாக புலம்பெயர்ந்த 65 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஏடிஆர் தொண்டு நிறுவனம் உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மாலா பாக்சி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.