
சென்னை: ‘குஜராத், பிஹார், உத்தரப்பிரதேசத்தை விட வளர்ச்சியில் தமிழகம் பின்னோக்கி உள்ளது’ என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். தமிழக பாஜக சார்பில் 79-வது சுதந்திர தினத்தையொட்டி ‘இல்லந் தோறும் மூவர்ணக்கொடி’ என்ற தலைப்பில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகில் மூவர்ணக் கொடி யாத்திரை நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு யாத்திரையை தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சமூக நீதியை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை. ஜனநாயக முறையில் தங்களது கோரிக்கையை முன்வைத்து தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.