
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் 12-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேச தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். அவர் தொடர்ச்சியாக 12-வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியேற்ற உள்ளார்.