
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை டெல்லி பாஜக தலைவர்கள் தான் சமாதானப்படுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். சென்னையில் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை சந்தித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை உறுதியாக அரசு நிறைவேற்ற வேண்டும். அவர்களை மீண்டும் பழைய முறைப்படி பணி அமர்த்த வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு இப்போது அவர்களது போராட்டத்தை எப்படியாவது தடுக்க முயல்கிறார்கள். முதல்வர் நேரடியாக வந்து பேச வேண்டும்.