• August 15, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: தனி​யார் பள்ளி வகுப்​பறை​யில் திடீரென பிளஸ்-1 மாணவர் மயங்கி விழுந்து உயி​ரிழந்​துள்​ளது அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​உள்ளது. விழுப்​புரம் மேல் தெரு​வைச் சேர்ந்​தவர் குமார் மனைவி மகேஸ்​வரி. கிராம உதவி​யாளர். இவரது மகன் மோகன்​ராஜ்(16), திருவிக வீதி​யில் உள்ள பிரபல தனி​யார் பள்​ளி​யில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்​தார். பள்​ளி​யில் தின​மும் காலை 7 மணிக்கு நடை​பெறும் சிறப்பு வகுப்​பில் மாணவர் மோகன்​ராஜ் பங்​கேற்​றுள்​ளார்.

இந்​நிலை​யில் நேற்று காலை வகுப்பு தொடங்​கு​வதற்கு முன்​பாக திடீரென மயங்கி விழுந்த மோகன்​ராஜ் மயங்கி கீழே விழுந்​தார். தகவலறிந்து பள்​ளிக்​குச் சென்ற தாயார் மகேஸ்​வரி, மகனை நேருஜி சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றார். அங்கு மருத்​து​வர்​கள் மாணவரைப் பரிசோ​தித்​த​போது, ரத்​தத்​தில் ஆக்​ஸிஜன் அளவு குறை​வாக இருப்​பது தெரியவந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *