
தனது குழந்தையின் பெயரை ஜாய் கிரிசில்டா அறிவித்திருக்கும் பதிவு, மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றதாக புகைப்படத்துடன் அறிவித்தார் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா. இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார் ஜாய் கிரிசில்டா. இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு பதிவையும் இதுவரை வெளியிடவில்லை மாதம்பட்டி ரங்கராஜ்.