
சென்னை: தமிழகத்தில் திட்டமிட்டு திணிக்கப்படும் வட இந்தியர்களுக்கு வாக்காளர் உரிமை அட்டை வழங்கக் கூடாது என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும் 19-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
இது குறித்து சென்னை விருகம்பாக்கம் சின்யமா நகரில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியது: “தாய்மொழி தமிழை கொண்டவருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். மற்றொரு மாநிலத்தில் இருந்து வந்து, இங்கு தேர்வு எழுதி மதிப்பெண் எடுத்து அரசு பணியில் கடைநிலை ஊழியர் முதல் அதிகாரிகள் வரை வரை பொறுப்பு பெறலாம் என்ற நிலையை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.