• August 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அடக்குமுறையை ஏவி தூய்மைப் பணியாளர்களை அகற்றிய திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையில் ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தியும் சென்னை மாநாகராட்சி அலுவலகத்திற்கு அருகில் அறவழியில் கடந்த 13 நாள்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினரைக் கொண்டு நள்ளிரவில் கைது செய்து தமிழக அரசு அப்புறப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உரிமை கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *