
மதுரை: தமிழக புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு மதியம் வரை கெடு விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் யாசர் அராபத், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் ஆக. 31-ல் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கவும் அல்லது பொறுப்பு டிஜிபியாக நியமிக்கவும் வாய்ப்புள்ளது. தமிகத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை உயர் பொறுப்புகளில் வைத்திருக்க ஆளும் திமுக அரசு முடிவு செய்துள்ளது.