
மதுரை: தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினையில் அரசின் மவுனமும், காவல் துறையினரைக் கொண்டு போராட்டத்தை நசுக்குவதும் மிகப் பெரிய மனித உரிமை மீறல் என சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் சி.ஜே.ராஜன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதர நான்கு மண்டலங்களில் மாநகராட்சியின் ஒப்பந்த தொழிலாளர்களாக சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் மாதம் ரூ.22,950 ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.