
சென்னை: ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்தை தமிழக காங், விசிகவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் புறக்கணித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாகவும், தமிழக நலனுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாகவும் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார்.