
திருப்பத்தூர்: “அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப் பயணத்தை கடந்த மாதம் தொடங்கினார். பல்வேறு மாவட்டங்களில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து வரும் அவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.