• August 13, 2025
  • NewsEditor
  • 0

மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி திமுக மேயரின் கணவர் பொன் வசந்த் கைதாகி உள்ள நிலையில், மண்டலத் தலைவர்களை போல் மாநகராட்சி மேயர் இந்திராணியின் பதவியும் பறிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி வட்டாரத்தை தாண்டி மதுரை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி. இவரது கணவர் பொன் வசந்த், அமைச்சர் பழனிவேல் தியாக ராஜனின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அதற்கு பரிசாகவே பழனிவேல் தியாகராஜன், பொன்வசந்த் மனைவி இந்திராணியை மேயராக்கினார். கடந்த 20024-ம் ஆண்டு ஆணையராக இருந்த தினேஷ்குமார், 150 கட்டிடங்களில் சொத்துவரி முறைகேடு நடந்ததாக ‘சைபர் கிரைம்’ போலீஸில் புகார் செய்தார். ஆனால், உள்ளூர் ஆளுங்கட்சி அரசியல் அழுத்தத்தால் ஆணையர் கொடுத்த புகார் மீது கடந்த 7 மாதங்களாக வழக்குப்பதிவு செய்யப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *