
புதுடெல்லி: செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்திர உயர்மட்ட விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 80-வது பொதுச் சபைக் கூட்டத் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் உயர்மட்ட பொது விவாதம் செப். 23 முதல் 29 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் பாரம்பரிய பேச்சாளராக பிரேசில் உள்ளது. பிரேசில் அரசு தலைவரின் உரையை அடுத்து, அமெரிக்க அதிபரின் உரை இருக்கும். ஐநா பொதுச் சபை மேடையில் உலக தலைவர்கள் மத்தியில் செப். 23-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உரை நிகழ்த்த உள்ளார்.