• August 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மழை வெள்ள பாதிப்பு பகு​தி​களில் இருந்து கர்ப்​பிணி​கள், நோயாளி​களை மீட்டு சிகிச்சை அளிக்க படகு ஆம்​புலன்ஸ் சேவை விரை​வில் தொடங்​கப்​பட​வுள்​ளது. தமிழக சுகா​தா​ரத் துறை​யின் கீழ் செயல்​படும் 108 ஆம்​புலன்ஸ் சேவையை, இஎம்​ஆர்ஐகீரின் ஹெல்த் சர்​வீசஸ் நிறு​வனம் செயல்​படுத்தி வரு​கிறது.

தற்​போது 900-க்​கும் மேற்​பட்ட ஆம்​புலன்ஸ் வாக​னங்​கள் உள்​ளன. ஆனால், மழை வெள்ள பாதிப்​பு​களின்​போது, அந்த வாக​னங்​களை இயக்க முடி​யாத சூழல் உள்​ளது. அதனால், 108 ஆம்​புலன்ஸ் நிர்வாகம், 5 படகு ஆம்​புலன்​ஸ்​ வாங்க முடிவு செய்​துள்​ளது. இதற்​கான திட்ட மதிப்​பீடு தயாரிக்​கப்​பட்​டு, அரசிடம் அனு​மதி கோரப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *