
சென்னை: மழை வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து கர்ப்பிணிகள், நோயாளிகளை மீட்டு சிகிச்சை அளிக்க படகு ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. தமிழக சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையை, இஎம்ஆர்ஐகீரின் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
தற்போது 900-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன. ஆனால், மழை வெள்ள பாதிப்புகளின்போது, அந்த வாகனங்களை இயக்க முடியாத சூழல் உள்ளது. அதனால், 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம், 5 படகு ஆம்புலன்ஸ் வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.