
பெங்களூரு: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அண்மையில், 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூருவில் உள்ள மகாதேவப்புரா சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் திருடப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த‌ கே.என்.ராஜண்ணா, ‘‘கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதே வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது. அதனை ஏன் காங்கிரஸார் தடுக்க‌வில்லை?'' என விமர்சித்தார். இந்த கருத்து காங்கிரஸ் மேலிடத்துக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.