• August 13, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உத்​தரபிரதேச மாநிலம் பதேபூரை அடுத்த பரூக்​கா​பாத்​தி​லும் தர்​கா​வா? கோயி​லா? என்ற சர்ச்சை கிளம்​பி​யுள்​ளது. இரு தரப்​பினர் நடத்​திய போராட்​டம் தொடர்​பாக 145 பேர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. உ.பி.​யின் பரூக்​கா​பாத்​தில் கைம்​கஞ்ச் பகு​தி​யில் ஷிவ்​ராய் மத் எனும் கிராமம் உள்​ளது. இங்கு கான் பகதூர் பாபா சைய்​யத் என்​பவரின் சமா​தி​யுடன் ஒரு தர்கா உள்​ளது. இங்கு வெள்​ளிக்​கிழமை​களில் முஸ்​லிம்​களு​டன் இந்​துக்​களும் வந்து பாபா சைய்​யத்​தின் சமா​தியை வழிபடு​வது வழக்​கம்.

இங்கு வருடந்​தோறும் நடை​பெறும் சந்​தனக்​கூடு விழா​விலும் இந்​துக்​கள் கலந்​து​கொண்டு மதநல்​லிணக்​கம் பேணி வந்​தனர்.இந்​நிலை​யில் இந்த தர்கா அங்​கிருந்த ஒரு சிவன் கோயிலை இடித்​து​விட்​டு, கட்​டப்​பட்​ட​தாக சமீபத்​தில் ஒரு புகார் கிளம்​பியது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி கடக்​சிங் என்ற கிராம​வாசி தர்​கா​வினுள் நுழைந்து அங்​கிருக்​கும் சமா​தியை சேதப்​படுத்​தி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *