
திருமலை: திருப்பதியிலிருந்து அலிபிரி வழியாக திருமலைக்கு செல்ல இனி ஃபாஸ்டேக் கட்டாயம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து வரும் பக்தர்கள் ரயில் அல்லது விமானத்தில் வந்தாலும், அவர்கள் கார், ஜீப், வேன் போன்றவற்றின் மூலம் திருமலைக்கு செல்கின்றனர். மேலும் பலர் தங்களது சொந்த கார்கள் மூலம் குடும்பத்தாருடன் திருமலைக்கு வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 15-ம் தேதி முதல் திருமலைக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் கண்டிப்பாக அவர்களின் வாகனங்களில் ஃபாஸ்டேக் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் வெளிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.