
புதுடெல்லி: ஒடிசா, பஞ்சாப், ஆந்திர மாநிலங்களில் ரூ.4,600 கோடி மதிப்பில் செமிகண்டக்டர் ஆலைகளை அமைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் செமிகண்டக்டர்களை தயாரிப்பதற்கான சூழல் மேம்பட்டு வருகிறது. இதற்கான ஆறு அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் ஏற்கெனவே பல்வேறு கட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.