
புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது ஓர் அறையில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் பாதி எரிந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு வர்மாவை பணியிட மாற்றம் செய்தார்.