
புதுடெல்லி: பாலஸ்தீனத்தின் காசாவில் செய்தியாளர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இஸ்ரேல் அரசு இனப்படுகொலை செய்து வரும் நிலையில் இந்திய அரசு மவுனமாக நிற்பது வெட்கக்கேடானது என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாகக் கண்டித்திருந்தார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் கருத்தும் வெளியிட்டுள்ளார்.