
திருச்சி: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினை ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
திருச்சி உறையூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சென்னையில் போராட்டம் நடத்திவரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை, துறை அமைச்சராகிய நான் சந்தித்துப் பேசவில்லை என்பது தவறு.