• August 13, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: பழநி முரு​கன் கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்​டும் விவகாரத்​தில், தற்​போதைய நிலையே தொடர வேண்​டும் என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை எழு​மலை​யைச் சேர்ந்தராம ரவிக்​கு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: பழநி தண்​டா​யுதபாணி சுவாமி கோயிலுக்​குச் சொந்​த​மான நிதி​யில் இருந்து ரூ.4.54 கோடி மதிப்​பில், உத்​தமபாளை​யத்​தில் திருமண மண்​டபம் கட்ட முடிவு செய்​யப்​பட்​டுள்ளது. இது அறநிலை​யத் துறை விதி​களுக்கு எதி​ரானது. கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்டக் கூடாது.

ரூ.400 கோடி நிதி… உத்​தம​பாளை​யம் திருக்​காளாத்​தீஸ்​வரர் மற்​றும் நரசிங்​க பெரு​மாள் கோயில் பெயரில் உத்​தேச​மாக ரூ.400 கோடி நிதி உள்​ளது. இதனால் இக்​கோ​யில் வறுமை நிலை​யில் இருக்​கும் கோயி​லாக கருத முடியாது. தற்​போது கோயில் சார்பு இல்​லாமல் மண்​டபம், கல்லூரி, மருத்​துவமனை, கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *