
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக மாநில அளவில் டாஸ்மாக் கடை பணியாளர்கள் கலந்தாய்வு மூலம் பணி நிரவல் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தற்போது 4,826 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் விற்பனையாளர், உதவி விற்பனையாளர், விற்பனை மேற்பார்வையாளர் என 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் டாஸ்மாக் கடை பணியாளர்களை கடைகளின் நிலை மற்றும் தேவைக்கு ஏற்ப பணியிட மாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில அளவில் கலந்தாய்வு மூலம் பணி நிரவல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மாவட்ட அளவில் பணி நிரவல் செய்யப்பட்ட நிலையில் முதல் முறையாக மாநில அளவில் இந்த பணி மேற்கொள்ளப்படவுள்ளது.