• August 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் முதல் முறை​யாக மாநில அளவில் டாஸ்மாக் கடை பணியாளர்கள் கலந்தாய்வு மூலம் பணி நிரவல் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்​தில் தற்​போது 4,826 டாஸ்​மாக் கடைகள் இயங்கி வரு​கின்றன. இந்த கடைகளில் விற்​பனை​யாளர், உதவி விற்​பனை​யாளர், விற்​பனை மேற்​பார்​வை​யாளர் என 24 ஆயிரத்துக்​கும் மேற்​பட்​டோர் பணியாற்றி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் டாஸ்​மாக் கடை பணி​யாளர்​களை கடைகளின் நிலை மற்​றும் தேவைக்கு ஏற்ப பணி​யிட மாற்​றம் செய்ய டாஸ்மாக் நிர்​வாகம் முடிவு செய்​துள்​ளது. இதற்​காக மாநில அளவில் கலந்​தாய்வு மூலம் பணி நிர​வல் செய்ய நடவடிக்கை எடுக்கப்​பட்​டுள்​ளது. இதற்கு முன் மாவட்ட அளவில் பணி நிர​வல் செய்​யப்​பட்ட நிலை​யில் முதல் முறை​யாக மாநில அளவில் இந்த பணி​ மேற்​கொள்​ளப்​பட​வுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *