
உடுமலை / பொள்ளாச்சி: திருப்பூர் மாவட்டம் உடுமலை, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று (ஆக.11) நடைபெறும் அரசு விழாக்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் உடுமலை நேதாஜி மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.949 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணி களை திறந்துவைத்தும், ரூ.182 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.295 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 19,785 பயனாளிகளுக்கு வழங்கியும் சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து, உடுமலை நேரு வீதியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை முதல்வர் திறந்து வைக்கிறார்.