
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில் விழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை, விமான நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு சென்னையில், புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து 5-வது ஆண்டாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறார்.