• August 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: டெல்​லி​யில் தேர்​தல் ஆணை​யம் நோக்கி பேரணி​யாகச் சென்ற ராகுல்​காந்தி உள்​ளிட்​டோரை போலீ​ஸார் கைது செய்ததைக் கண்​டித்​து, சென்னை சத்​தி​யமூர்த்தி பவன் முன்பு மறியலில் ஈடு​பட்ட செல்​வப்​பெருந்​தகை உள்​ளிட்ட காங்​கிரஸ் நிர்வாகி​கள் நேற்று கைது செய்​யப்​பட்​டனர்.

வாக்​காளர் பட்​டியலில் நடை​பெற்​றுள்ள முறை​கேடு தொடர்​பாக டெல்​லி​யில் போராட்​டம் நடத்​திய அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி உள்​ளிட்ட தலை​வர்​களை​யும், இண்​டியா கூட்டணி தலை​வர்​களை​யும் டெல்லி காவல் துறை நேற்று கைது செய்​தது. இதைக் கண்​டித்​து, தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தலை​மை​யில் சென்னை சத்​தி​யமூர்த்தி பவன் முன்பு நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *