• August 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உ.பி.​யின் ஆக்ரா அரு​கிலுள்ள பதேபூர் நகரின் அபுநகரில் ரெடியா எனும் பகுதி உள்​ளது. இங்கு மிக​வும் பழமை​யான முஸ்​லிம்​களின் தர்கா உள்​ளது. முகலாயர் ஆட்​சிக்​கால இந்த கட்​டிடத்​தின் உள்ளே நவாப் அப்​துஸ் சமது என்​பவரின் புனித சமாதி உள்​ளது. இங்கு வெள்​ளிக்​கிழமை தோறும் முஸ்​லிம்​கள் வந்து வணங்​கிச் செல்​வது வழக்​கம். இந்த இடம், உ.பி. அரசின் நிலப் பதிவுகளில் கஸ்ரா எண் 753-ன் கீழ் மக்​பரா மங்கி (தேசிய சொத்​து) என்று அதி​காரப்​பூர்​வ​மாக பதிவு செய்​யப்​பட்ட கல்​லறை​யாக உள்ளது.

இந்​நிலை​யில் பாஜக, பஜ்ரங் தளம் உள்​ளிட்ட இந்​துத்​துவா அமைப்​பினர், ‘‘இந்த தர்​கா, ஒரு சிவன் கோயிலை இடித்​து​விட்டு கட்டப்பட்​டுள்​ளது. எனவே இந்த இடம் இந்​துக்​களுக்கு சொந்​த​மானது. இதனுள் இருக்​கும் கட்​டமைப்​புக்​குள் தாமரை மலர் மற்​றும் திரிசூலம் இருப்​பதே கோயிலுக்​கான ஆதா​ரங்​கள்’’ என்று சர்ச்​சையை கிளப்​பினர். மேலும் இந்​துத்​துவா அமைப்​பு​களின் திரளான தொண்​டர்​கள் நேற்று பாது​காப்​புக்கு இருந்த போலீ​ஸாரை மீறி தர்​கா​வில் புகுந்​து சேதப்​படுத்தினர். இதையடுத்து போலீ​ஸார் அனை​வரை​யும் அங்​கிருந்து விரட்டி அமை​தியை ஏற்​படுத்​தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *