• August 12, 2025
  • NewsEditor
  • 0

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த தும்பலபட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான செங்கல் தயாரிக்கும் சேம்பர் இயங்கி வருகிறது. இந்தச் சேம்பரில் கணக்கராக வேலை செய்து வந்தவர் சரவணன் (23). நேற்று முன் தினம் இரவு சேம்பருக்குச் சென்ற சரவணன் உயிரிழந்தார்.

சரவணன் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்து போலீசார் வந்தனர். அதேநேரம், கிராம மக்கள் சேம்பரில் திரண்டனர். சரவணனைக் கொன்ற குற்றவாளியைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் போலீசாரிடம் வாக்கு வாதம் செய்தனர்.

கொலை நடந்த இடத்தில் தடயங்களைச் சேகரித்த போலீசார் சரவணன் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சரவணனின் குடும்பத்தினர்

இந்த நிலையில் சேம்பரில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சம்பவம் நடந்த அன்று, சேம்பரில் வடமாநிலத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகள்கள் தங்கி இருந்த அறைக்குச் சரவணன் சென்று சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

இதனை வைத்து சிறுமிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்தனர். விசாரணையில் சரவணன் 16 வயது சிறுமியைக் காதலித்து வந்ததாகவும் சம்பவம் நடந்த இரவு நேரத்தில் சிறுமியை சரவணன் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்ற போது சிறுமி சரவணனைத் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த சரவணனுக்குத் தலையில் அடிபட்டு உயிரிழந்ததுள்ளார்.

பின்னர் தனது தந்தை மற்றும் தங்கையிடம் நடந்ததை சிறுமி கூறிய போது கொலையை மறைப்பதற்கு இருவரும் உதவி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. வடமாநிலத் தொழிலாளியான கோபால் மற்றும் இரண்டு மகள்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *