
புதுடெல்லி: ‘வாக்கு திருட்டு’ தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு 3 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளனர்.
‘‘மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக.வுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து வாக்குகள் திருடப்பட்டுள்ளன. கர்நாடகாவில் உள்ள மகாதேவபுரா தொகுதியிலும் வாக்குகள் திருடப்பட்டுள்ளன’’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.