• August 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​திருத்​தப்​பட்ட புதிய வரு​மான வரி மசோதா மக்​களவை​யில் நேற்று நிறைவேறியது. இந்​தி​யா​வில் கடந்த 60 ஆண்டுகளுக்​கும் மேலாக அமலில் இருந்து வந்த 1961-ம் ஆண்டு வரு​மான வரி சட்​டத்​துக்கு மாற்​றாக புதிய சட்​டம் இயற்ற மத்​திய அரசு திட்​ட​மிட்​டது.

இதன்​படி, பல சிக்​கலான நடை​முறை​கள் நீக்​கப்​பட்​டு, எளிமைப்​படுத்​தப்​பட்ட புதிய வரு​மான வரி மசோதா 2025 கடந்த பிப்​ர​வரி 13-ம் தேதி மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மசோ​தாவுக்கு எதிர்க்​கட்​சிகள் எதிர்ப்பு தெரி​வித்​த​தால், இதுகுறித்து ஆராய பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலை​மை​யில் தேர்​வுக்கு குழு அமைக்​கப்​பட்​டது. இந்த குழு பல்​வேறு தரப்​பினரின் கருத்​துகளை கேட்டு அரசிடம் அறிக்கை சமர்ப்​பித்​தது. இதனிடையே, ஏற்​கெனவே தாக்​கல் செய்​யப்​பட்ட மசோதா கடந்த வெள்​ளிக்​கிழமை திரும்​பப் பெறப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *