• August 12, 2025
  • NewsEditor
  • 0

திருவண்ணாமலை: சென்​னை​யில் இருந்து ஆன்​மிகச் சுற்​றுலா சென்ற குழு​வினர் பரு​வதமலை​யில் இருந்து கீழே இறங்​கிய​போது, மழை வெள்​ளத்​தில் சிக்கி 2 பெண்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். திரு​வண்​ணா​மலை மாவட்​டம் கலசப்​பாக்​கம் அடுத்த தென்​ம​காதேவ மங்​கலம் கிராமத்​தில் உள்ள பிரசித்தி பெற்ற மல்​லி​கார்​ஜுனர் மற்​றும் பிரம்​மாம்​பிகை கோயில் 4,560 அடி உயர​முள்ள பரு​வத மலை​யில் உள்​ளது. இந்​தக் கோ​யிலுக்கு நேற்று முன்​தினம் அதி​காலை சென்னை திரு​வேற்​காடு பகு​தியி​லிருந்து 15 பேர் வாக​னத்​தில் வந்​துள்​ளனர்.

இவர்​கள், மலை​யேறிச் சென்று சுவாமி தரிசனம் முடித்​து​விட்டு நேற்று முன்​தினம் மாலை கீழே இறங்கி வந்​துள்​ளனர். ஓடையை கடக்க முயற்சி இந்​நிலை​யில், அன்​றைய தினம் பெய்த கனமழை​யி​னால் காட்​டாற்று வெள்​ளம் பெருக்​கெடுத்​துள்​ளது. குறிப்​பாக, வனத்​துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள ஓடை​யில் மழைவெள்​ளம் அதிக அளவில் பெருக்​கெடுத்து ஓடி​யுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *