
புதுடெல்லி: ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், ரஷ்யா போர் நிறுத்தத்துக்கு சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரடியாக சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது போர் நிறுத்தம் குறித்து முடிவு எடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.