
மதுரை: ‘திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்க என்ன ஆதாரம் உள்ளது?’ என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக் கோரிய வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்குகள் 3-வது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, “திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலைஎன அழைக்க என்ன ஆதாரம் உள்ளது? ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்த அனுமதி உண்டா? நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு அனுமதி இருக்கிறதா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு மனுதாரர்கள் தரப்பில், “திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடுவதால் மலையின் புனிதம் கெடும், தீட்டு ஏற்படும்” என வாதிடப்பட்டது.