• August 12, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: ‘​திருப்​பரங்​குன்​றம் மலையை சிக்​கந்​தர் மலை என அழைக்க என்ன ஆதா​ரம் உள்​ளது?’ என உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்பி உள்ளது. திருப்​பரங்​குன்​றம் மலை​யில் ஆடு, கோழி பலி​யிட​வும், அசைவ உணவு பரி​மாற​வும் தடை விதிக்​கக் கோரிய வழக்கில் 2 நீதிப​தி​கள் மாறு​பட்ட தீர்ப்பு வழங்​கிய​தால் இந்த வழக்​கு​கள் 3-வது நீதிபதி விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டது. இந்த வழக்கை நீதிபதி ஆர்​.​விஜயகு​மார் விசா​ரித்து வரு​கிறார்.

இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​த​போது, “திருப்​பரங்​குன்​றம் மலையை சிக்​கந்​தர் மலைஎன அழைக்க என்ன ஆதா​ரம் உள்​ளது? ஆடு, கோழி பலி​யிட்டு கந்​தூரி விழா நடத்த அனு​மதி உண்​டா? நெல்​லித்​தோப்பு பகு​தி​யில் இஸ்​லாமியர்​கள் தொழுகை நடத்​து​வதற்கு அனு​மதி இருக்​கிற​தா?” என நீதிபதி கேள்வி எழுப்​பி​னார். இதற்கு மனு​தா​ரர்​கள் தரப்​பில், “திருப்​பரங்​குன்​றம் மலை​யில் ஆடு, கோழி பலி​யிடு​வ​தால் மலை​யின் புனிதம் கெடும், தீட்டு ஏற்​படும்” என வாதிடப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *