
சென்னை: சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தான் அளித்த புகாரை போலீஸார் நிராகரித்து விட்டதாக பாஜக வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி, கடந்த ஏப்ரலில் சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த பேச்சுகாரணமாக அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது. உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.