
சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்ததற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு, எம்ஜிஆர் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்து, முதல் இடைத்தேர்தலிலேயே தனக்குள்ள மக்கள் செல்வாக்கை நிரூபித்தவர். 1977-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றதுடன், தொடர்ந்து 3 முறை ஆட்சியை அமைத்து முதலமைச்சராகவே மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்குச் சென்றவர்.