
நொய்டா: உத்தர பிரதேசம் நொய்டாவில் சர்வதேச போலீஸ் மற்றும் குற்ற புலனாய்வு அலுவலகத்தை போலியாக நடத்தி மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கும்பலை நொய்டா போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேசம் நொய்டாவில் சர்வதேச போலீஸ் மற்றும் புலனாய்வு அலுவலகம் என்ற பெயரில் 6 பேர் கும்பல் போலி அலுவலகத்தை நடத்தி வந்துள்ளது. காவல் நிலையத்தின் போலி சின்னங்களுடன் அந்த அலுவலகத்தை அவர்கள் வடிவமைத்துள்ளனர். மேலும், போலி அடையாள அட்டைகள், ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகள், போலி ஆவணங்கள், சான்றிதழ்களையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். www.intlpcrib.in என்ற பெயரில் அவர்கள் இணையதளத்தையும் தொடங்கி பல தரப்பில் இருந்து நன்கொடை வசூலித்துள்ளனர். அந்த அலுவலகம் சட்டப்படி இயங்குவது போல் பல தேசிய மற்றும் சர்வதேச சான்றிதழ்களும் போலியாக அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.