
மும்பை: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் தேனிலவுக்காக பஹல்காம் சென்ற கடற்படை அதிகாரி வினய் நர்வால் உயிரிழந்தார். கணவரின் உடல் அருகே அவரது மனைவி ஹிமான்ஷி கதறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.