
புதுச்சேரி: நிர்ணயித்த நேரத்தைத் தாண்டி புதுச்சேரி நகரப் பகுதியில் இயங்கிய 13 ரெஸ்டோ பார்கள் உரிமத்தை கலால் துறை சஸ்பெண்ட் செய்துள்ளது.
புதுவையில் பல்வேறு வசதிகளுடன் கூடிய மதுபார்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டவை இயங்கி வருகின்றன. இந்த நிலையில், புதிதாக ரெஸ்டோ பார்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த பார்களில் மது விருந்தோடு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமும் நடைபெறும். டிஜே போடும் பாட்டுக்கு இங்கு கூடும் இளைஞர்கள் நடனம் ஆடுவார்கள்.