
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் வெளியுறவுப் பிரிவு தலைவர் பதவியை அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா இன்று ராஜினாமா செய்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு ஆனந்த் சர்மா எழுதிய ராஜினாமா கடிதத்தில், “இளம் தலைவர்களை பொறுப்புக்கு கொண்டுவருவதற்காக இந்தக் குழு மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று நான் முன்பே காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் இருவருக்கும் தெரிவித்ததன் அடிப்படையில் எனது பொறுப்பினை ராஜினாமா செய்கிறேன். இந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்காக கட்சித் தலைமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.