• August 11, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் சமீபத்​தில் திறக்​கப்​பட்ட செனாப் பாலம் வழி​யாக 1,400 டன் சிமென்ட் மூட்​டைகளு​டன் முதல் சரக்கு ரயில் ஜம்மு காஷ்மீர் சென்​றடைந்​தது. ஜம்மு காஷ்மீர் மலைப் பகுதி என்​ப​தால் அங்கு வலு​வான தரைவழி போக்​கு​வரத்து வசதி​கள் இல்​லாமல் இருந்​தது. அதனால் அங்கு பிரம்​மாண்ட கட்​டிடங்​கள் அமைப்​ப​தில் பல சிக்​கல்​கள் ஏற்​பட்​டன. தற்​போது ஜம்மு காஷ்மீரில் ரயில்வே கட்​டமைப்​பு​கள் நவீனப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்​டத்​தில் செனாப் ஆற்​றின் குறுக்கே 4315 அடி நீளத்​தில், ஆற்​றில் இருந்து 1,178 அடி உயரத்​தில் இரும்பு மற்​றும் கான்​கிரீட் ரயில் பாலம் கடந்த 3 ஆண்டு கால​மாக அமைக்​கப்​பட்டு வந்​தது. இந்த பாலம் கடந்த ஜுன் 6-ம் தேதி திறக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *