
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் திறக்கப்பட்ட செனாப் பாலம் வழியாக 1,400 டன் சிமென்ட் மூட்டைகளுடன் முதல் சரக்கு ரயில் ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தது. ஜம்மு காஷ்மீர் மலைப் பகுதி என்பதால் அங்கு வலுவான தரைவழி போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருந்தது. அதனால் அங்கு பிரம்மாண்ட கட்டிடங்கள் அமைப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. தற்போது ஜம்மு காஷ்மீரில் ரயில்வே கட்டமைப்புகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 4315 அடி நீளத்தில், ஆற்றில் இருந்து 1,178 அடி உயரத்தில் இரும்பு மற்றும் கான்கிரீட் ரயில் பாலம் கடந்த 3 ஆண்டு காலமாக அமைக்கப்பட்டு வந்தது. இந்த பாலம் கடந்த ஜுன் 6-ம் தேதி திறக்கப்பட்டது.