
சென்னை: அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை சுதந்திர தினத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பல்வேறு சுகாதார குறியீடுகளில் தமிழக சுகாதாரத் துறை முன்னணியில் உள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 8-வது முறையாக சிறந்த மாநிலம் என்ற விருதை பெற்று தமிழகம் சாதனை படைத்துள்ளது. ஆனால், தமிழகத்துக்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே குறைவான ஊதியம் வழங்கப்படுவது மிகுந்த வருத்தமளிக்கிறது.